முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க போலீஸார் தீவிரம்!
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது துணை நடிகை ஒருவர் பாலியல் புகார் கொடுத்திருந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எடுத்து தலைமறைவாக இருக்கும் மணிகண்டனை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.
Also Read: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு - புகாரளித்த நடிகை சாந்தினிக்கு மருத்துவப் பரிசோதனை
துணை நடிகை அளித்த புகார் தொடர்பாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படைகள் மதுரை சென்று தற்போது மணிகண்டனை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்
source https://www.vikatan.com/news/general-news/18-06-2021-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக