நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகில் உள்ள மழவன்சேரம்பாடியைச் சேர்ந்தவர் ராஜா-லலிதாகுமாரி தம்பதி. இந்த தம்பதியின் நிஷாந்தி என்ற13 வயது மகள் பந்தலூரில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்வதாக தெரிகிறது. தாய் லலிதாகுமாரி தனது மகள் நிஷாந்தியுடன் வசித்து வந்துள்ளார்.
கடந்த 12 ஆம் தேதி நிஷாந்தி தனது வீட்டில் உணவு சமைக்க முற்பட்டுள்ளார்.அப்போது திடீரென சிறுமியின் உடையில் தீப்பிடித்து உடல் முழுவதும் பரவியுள்ளது.தீக்காயத்தால் அலறிய சிறுமியின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், கடுமையான தீக்காயத்துடன் இருந்தவரை மீட்டு சிகிச்சைக்காக பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சிறுமி நிஷாந்தி தற்போது பரிதாபமாக உயிரிழந்தார். காவல் துறை இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சோகம் குறித்து சேரம்பாடி காவல்துறையினர்,"கொரோனா காரணமாக பள்ளிகள் இயங்காததால் குழந்தைகளுக்கு பல்வேறு வகையான பாதிப்புகள் ஏற்பட்டு வருவது கவலையாக இருக்கிறது.இந்த மாணவிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார்.இந்த சம்பவம் குறித்து சேரம்பாடி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.
source https://www.vikatan.com/news/tamilnadu/13-years-old-child-died-in-a-fire-accident-at-nilgiris
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக