Ad

புதன், 23 டிசம்பர், 2020

சென்னை: `அழைப்பு வந்தாலும் தி.மு.க-வில் சேர மாட்டேன்!' - கோபாலபுரம் இல்லத்தில் மு.க.அழகிரி! #NowAtVikatan

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.அழகிரி!

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், சென்னை கோபாலபுரத்திலுள்ள இல்லத்தில் தயாளு அம்மாளைச் சந்தித்தார் மு.க.அழகிரி. வீட்டில் அவரின் உடல்நலம் குறித்துக் கேட்டறிந்ததாகச் சொல்லப்படுகிறது. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனது பங்களிப்பு இருக்கும் என முன்னர் அழகிரி தெரிவித்திருந்த நிலையில், இந்தச் சந்திப்பு அதிக கவனம் பெற்றிருக்கிறது.

மு.க.அழகிரி
மு.க.அழகிரி
மு.க.அழகிரி
மு.க.அழகிரி

கோபாலபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.அழகிரி, ``வரும் ஜனவரி 3-ம் தேதி மதுரையில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறேன். அப்போது தொண்டர்கள் வலியுறுத்தினால் கட்சி தொடங்குவேன். தி.மு.க-வுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பில்லை. தி.மு.க-விலிருந்து எந்த அழைப்பும் வரவில்லை. வந்தாலும், இணைந்து பணியாற்ற வாய்ப்பில்லை. ரஜினி சென்னை திரும்பிய பின்னர் அவரை நேரில் சந்திப்பேன்” என்றார்.



source https://www.vikatan.com/news/general-news/24-12-2020-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக