கோவை துடியலூர் அருகேயுள்ள அப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி. இவர் தனது மகளுடன் வசித்துவந்தார். மகள் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது.
Also Read: ``கோவை மக்கள் பதற்றமடைய வேண்டாம்... ஆனால்..!" - கொரோனா குறித்து எச்சரிக்கும் ஆட்சியர்
தனலட்சுமியின் மகன் சசிக்குமார் திருமணமாகி அவர் குடும்பத்துடன் சரவணம்பட்டியில் வசித்துவருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு தனலட்சுமி மகன் சசிக்குமாரை செல்போனில் தொடர்புகொண்டிருக்கிறார்.
அப்போது, ``நான் ஒரு ஜோதிடரை அணுகினேன். அவர் எனக்கு உடல்நலம் பாதிக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, கவனமாக இருங்கள்” என்று கூறினார். ``அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் உன்னால், என்னையும் சகோதரியையும் பார்த்துக்கொள்வது கடினம்” என்று மகனிடம் வருத்தப்பட்டிருக்கிறார்.
சசிக்குமார், ``அப்படி எதுவும் ஆகாது. ஒருவேளை ஏதாவது நிகழ்ந்தால்கூட உங்களை நான் பார்த்துக்கொள்வேன்” என்று ஆறுதல் அளித்திருக்கிறார்.
ஆனால் தனலட்சுமி சமாதானம் அடைந்ததாகத் தெரியவில்லை. தொடர்ந்து சசிக்குமார் செல்போனில் தொடர்ந்து தொடர்பு கொண்டபோது தனலட்சுமி எடுக்கவில்லை. இதையடுத்து, அருகில் உள்ளவர்களிடம் சொல்லிப் பார்த்தபோது, அவர் இறந்தது தெரியவந்தது. உடனடியாக அவரும் போலீஸாரும் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
தனலட்சுமி தற்கொலை செய்வதற்கு முன்பு, மகளுக்கு விஷம் கொடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
source https://www.vikatan.com/news/crime/coimbatore-woman-suicide-after-killing-her-daughter-police-investigation
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக