விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த போந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரின் மகள்கள், அன்பரசி (10), பிரபாவதி (7). மேலும், அதே பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரின் மகள் ரமணி (10) (மூன்று சிறுமிகளின் பெயரும் மாற்றப்பட்டுள்ளன). இந்த மூன்று சிறுமிகளின் பெற்றோர்களும் நேற்று (09.01.2022) விவசாய நிலத்தில் நெல் அறுவடை செய்துகொண்டிருந்துள்ளனர். அப்போது, மாலை வேளையில் மூன்று சிறுமிகளும் நிலத்தின் அருகேயுள்ள குட்டையில் குளிப்பதற்காகச் சென்றுள்ளனர்.
அப்போது குட்டையில் தவறி விழுந்த மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அக்கா, தங்கை உட்பட மூன்று சிறுமிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் செஞ்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் மூன்று சிறுமிகளின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள செஞ்சி காவல்துறையினர், விசாரித்துவருகின்றனர்.
source https://www.vikatan.com/news/death/the-tragedy-of-the-incident-where-three-girls-who-went-to-bath-in-the-pool-drowned
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக