Ad

திங்கள், 10 ஜனவரி, 2022

புதுக்கோட்டை: 11வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! - கணித ஆசிரியர் போக்சோவில் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியைச் சேர்ந்தவர், 11 வயது சிறுமி. கறம்பக்குடி பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் தான், அந்த மாணவிக்கு, அந்தப் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரியும் சீனியப்பா என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்தாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, அந்தச் சிறுமி கடந்த சில தினங்களாகவே பள்ளிக்குச் சரியாக வரவில்லை. ஒருவித சோகத்துடன் வெளியே வராமல் வீட்டிற்குள்ளே முடங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், சிறுமியின் பெற்றோர்கள் சிறுமியிடம் விசாரித்த போது தான், சிறுமிக்குக் கணித ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் சீனியப்பா மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 11வயது சிறுமி மற்றும் கணித ஆசிரியர் சீனியப்பா ஆகியோரிடம் தனித்தனியாக நடத்தப்பட்ட விசாரணையில், கணித ஆசிரியர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.



source https://www.vikatan.com/news/crime/11-year-old-girl-sexually-harassed-maths-teacher-arrested-in-pocso

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக