Ad

வியாழன், 2 செப்டம்பர், 2021

காதலனுடன் செல்ல எதிர்ப்பு; சகோதரியின் வன்கொடுமைப் புகார்! -2 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த உண்மை!

மும்பைப் புறநகர்ப் பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவர், கடந்த 2018-ம் ஆண்டு தன் சகோதரன், வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் தன்னை வன்கொடுமை செய்துவிட்டதாகப் புகார் செய்தார். புகார் செய்தபோது அந்தப் பெண் மைனராக இருந்தார். அதனால் அந்தப் பெண்ணின் அண்ணன்மீது குழந்தைகள் பாலியல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்தப் பெண்ணின் சகோதரருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கவில்லை.

சிறார் வதை

அதேசமயம் இது தொடர்பான வழக்கு மும்பையிலுள்ள தீன்தோஷி கோர்ட்டில் விசாரிக்கப்பட்டுவந்தது. விசாரணையின்போது புகார் அளித்தவரும், விசாரணை அதிகாரியும் நேரில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தனர். இதில் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண், அப்படியே தனது வாக்குமூலத்தை மாற்றிக் கூறினார்.

`தனது காதலனுடன் வெளியில் செல்வதைத் தன் சகோதரன் எதிர்த்து தன்னுடன் சண்டையிட்டதோடு, தன்னை அடித்ததால் அது போன்ற ஒரு போலியான வன்கொடுமைப் புகாரை தெரிவித்ததாக’ நீதிமன்றத்தில் தெரிவித்தார். தன்னைத் தன் சகோதரன் வன்கொடுமை செய்யவில்லை என்றும் குறிப்பிட்டார்.

Also Read: மைசூரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை: கொடூரச் சம்பவமும் விசாரணை நிலையும் - ஒரு பார்வை

இந்த வழக்கில் கருத்து தெரிவித்த நீதிமன்றம், `புகார் செய்த பிறகு சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை எதுவும் நடத்தப்படவில்லை. சம்பவம் நடந்ததாகக் கூறப்படும்போது பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் மைனர் என்பதை நிரூபிக்கவில்லை. எனவே, குழந்தைகள் பாலியல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டதை ரத்து செய்கிறோம்’ எனத் தெரிவித்தது.

தீர்ப்பு

மேலும், பெண்ணின் வாக்குமூலம் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், சொந்த வாக்குமூலத்தை மனுதாரர் மாற்றிக் கூறுகிறார். அவரது வாக்குமூலம் நம்பும்படியாக இல்லை. அதோடு குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரமும் இல்லை. எனவே இந்த வழக்கிலிருந்து குற்றம்சாட்டப்பட்ட நபர் விடுவிக்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து இரண்டு ஆண்டுகளாக எந்தத் தவறும் செய்யாமல் சிறையிலிருந்த சகோதரர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

Also Read: பாலிடிக்ஸ்! பாலியல் பாதுகாப்பு? தொடரும் அவலம்



source https://www.vikatan.com/news/judiciary/brother-arrested-in-rape-complaint-from-sister-was-fake-he-was-released-after-two-years

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக