Ad

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

தஞ்சாவூர்: குப்பையில் கிடந்த மனித மண்டை ஓடு, எலும்புகள்! - அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்

தஞ்சாவூர் அருகே ஆற்றின் ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள குப்பை கிடங்கில் அட்டைப்பெட்டிக்குள் வைக்கப்பட்ட மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகள் கிடந்துள்ளது. நாய்கள் மனித மண்டை ஓட்டை, பொதுமக்கள் நடமாடும் சாலைக்கு இழுத்து சென்றதது. மண்டை ஓட்டை பார்த்த பொதுமக்கள் அலறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குப்பையில் மனித மண்டை ஓடு

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள ஒன்பத்துவேலி கிராமத்தில் குடமுருட்டி ஆற்றங்கரை ஓரத்தில் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு உள்ளது. இதில் ஐந்துக்கும் மேற்பட்ட அட்டைபெட்டிகள் கிடந்துள்ளது. அதற்குள் மனித மண்டை ஓடுகள் மற்றும் மனித எலும்புகள் இருந்துள்ளன. ஆற்றுக்கு குளிக்க வந்தவர்கள் அட்டைப்பெட்டிக்குள் மண்டை ஓடு தெரிவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

எப்படி இங்கு மண்டை ஓடுகள் வந்தது யார் இவ்வளவு தைரியாமா பொதுவெளியில் வந்து போட்டுள்ளனர். சமூக விரோதிகளின் செயலாக இருக்குமா என பல வகையில் பேசிக் கொண்டிருந்தனர். அதற்குள் அங்கிருந்த தெரு நாய்கள் அட்டைபெட்டியை கடித்து இழுக்க, அதில் உள்ளே இருந்த மண்டை ஓடுகள் வெளியே விழுந்தன. இதனை பார்த்த சிலர் அச்சம் காரணமாக அங்கிருந்து சென்று விட்டனர். நாய்கள் மண்டை ஓட்டை இழுத்து கொண்டு மக்கள் நடமாட கூடிய சாலை பகுதிக்கும் சென்றது.

பொதுமக்கள்

கிட்டதட்ட ஐந்துக்கும் மேற்பட்ட மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகள் கிடந்ததால் அந்த இடமே பெரும் பரபரப்புடன் காணப்பட்டது. இந்த தகவல் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றுள்ளது. இதையடுத்து அவர்கள் வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக் கூடத்தில் உள்ள மனித எலும்புகள் என தெரிய வந்தது.

Also Read: தஞ்சாவூர் : ` போலீஸ் தாக்கியதாகப் புகார் '- விசாரணைக் கைதி மரணத்தில் மாஜிஸ்திரேட் விசாரணை!

அரசு மருத்துவமனை நிர்வாகத்தில் பிரேத பரிசோதனை கூடத்தை தூய்மைப் பணியாளர்கள் தூய்மைப் பணி செய்தனர். அதில் அடையாளம் தெரியாத நபர்களின் சடலங்களை பிரேத பரிசோதனை செய்த பிறகு மண்டை ஓடு மற்றும் எலும்புகளை அட்டைப்பெட்டி மற்றும் பாட்டிலில் பாதுகாத்து வைத்திருப்பார்கள். அப்படி வைத்திருந்த மண்டை ஓடுகளை தூய்மைப் பணியாளர்கள் தவறுதலாகத் குப்பைக் கிடங்கில் போட்டு விட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்தனர்.

மனித எலும்புகள்

அதன் பின்னர் மீண்டும் தூய்மைப் பணியாளர்கள் குப்பைக் கிடங்குக்குச் சென்று மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகளை எடுத்து சுடுகாட்டில் குழி தோண்டிப் புதைத்தனர். அதன் பிறகே பரபரப்பு அடங்கியது. அரசு மருத்துவமனை அலட்சியமாக செயல்பட்டதன் விளைவே மண்டை ஓடுகள் குப்பைக்கு வந்துள்ளது, பொதுமக்கள் பெரும் அச்சமடைந்தனர் இனிமேலாவது பணிகளில் மெத்தனம் காட்டாமல் இருக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.



source https://www.vikatan.com/news/crime/bones-and-human-scull-found-in-garbage-in-tanjore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக