Ad

ஞாயிறு, 25 ஜூலை, 2021

Tamil News Today: தனித்தனியே டெல்லி பயணம்.. பிரதமர் மோடியை சந்திக்கும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி!

டெல்லியில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி!

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று திடீரென தனித்தனியாக டெல்லி பயணம் மேற்கொண்டனர். இருவரும் இன்று காலையில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பின்னர், சசிகலாவின் அரசியல் நகர்வுகள் அதிமுகவுக்குள் புயலை கிளப்பி வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம், ஓ.பன்னீர்செல்வம், ஆகியோர் தனித்தனியாக டெல்லி புறப்பட்டு சென்றது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.

எடப்பாடி - பன்னீர்

இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை நாடாளுமன்ற கட்டடத்தில் உள்ள அவரது அறையில் இருவரும் கூட்டாக சந்தித்து பேசுகிறார்கள். இந்த சந்திப்பு தொடர்பாக அதிமுக வட்டாரத்தில் விசாரித்தால், `தேர்தலுக்கு பிந்தைய வழக்கமான சந்திப்பு தான். இதில் அரசியல் இல்லை’ என்கிறார்கள். மேலும் மேக்கேதாட்டு விவகாரம் தொடர்பாகவும், தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்குவது தொடர்பாக பிரதமரிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-26-07-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக