Ad

ஞாயிறு, 18 ஜூலை, 2021

தஞ்சாவூர்: 5 சவரன் நகைக்காக கொலை செய்யப்பட்ட பெண்! - சிக்கிய வேலைக்காரப் பெண், அவரின் கணவர்

தஞ்சாவூரில் வீடு ஒன்றில் வேலை பார்த்து வந்த வேலைக்காரப் பெண் ஒருவர் தனியாக இருந்த வீட்டு உரிமையாளரான வயதான பெண்ணை ஐந்து சவரன் நகைக்காக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த வேலைக்கார பெண்ணையும் அவரது கணவரையும் போலீஸார் கைது செய்தனர்.

போலீஸ் கைது செய்த ஆரோக்கிய டென்சி

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவருடைய மனைவி ஜோஸ்பின்மேரி, வயது 65. இவர்களுடைய மகன் பிராங்க்ளின் மதுரை ரயில்வேயில் டிடிஆராக வேலை செய்து வருகிறார். அந்தோணிசாமி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

சேக்கிழார் தெருவில் சொந்த வீட்டில் ஜோஸ்பின் மேரியும் அவரது மகன் பிராங்க்ளினும் வசித்து வந்தனர். பிராங்ளின் மனைவி லதா அவரது அம்மா வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 14-ம் தேதி பிராங்க்ளின் மதுரைக்கு வேலைக்கு சென்று விட்டார். இதையடுத்து 15-ம் தேதி இரவு பிராங்க்ளின் தனது அம்மா ஜோஸ்பின்மேரிக்கு போன் செய்துள்ளார். பல முறை போன் செய்தும் அவரது அம்மா நம்பருக்கு போன் போகவில்லை.

Also Read: கோவை: நகை காணவில்லை எனப் புகாரளித்த பெண் தற்கொலை; விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!

இதையடுத்து அருகே உள்ள வீட்டில் வசிப்பவருக்கு போன் செய்து, ``பல முறை போன் செய்தும் அம்மா போன் போகமாட்டேங்குது கொஞ்சம் என்னனு பார்த்துட்டு அம்மாவ பேச சொல்லுங்கனு” கூறியிருக்கிறார். பின்னர் அருகில் இருந்தவர் தகவல் சொல்வதற்காக ஜோஸ்பின்மேரி வீட்டுக்கு சென்றிருக்கிறார். வீட்டினுள் சோபாவில் ஜோஸ்பின் மேரி இறந்தநிலையில் கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்தவர், உடனடியாக பிராங்ளினுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவரும் உடனடியாக மதுரையிலிருந்து புறப்பட்டு தஞ்சாவூர் வந்தார்.

தனது அம்மாவுக்கு அடிக்கடி பிக்ஸ் வரும் அன்றைக்கும் பிக்ஸ் வந்ததால் இறந்திருக்கலாம் என பிராங்களின் முதலில் நினைத்தார். ஆனால் தனது அம்மா அணிந்திருந்த 5 சவரன் செயின், வளையல் உள்ளிட்ட தங்க நகைகள் மற்றும் அம்மா வைத்திருந்த செல்போன் ஆகியவற்றை காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பிராங்க்ளின் அம்மா சாவில் மர்ம இருப்பதாக கூறி விசாரணை நடத்த வேண்டும் என போலீஸில் புகார் கொடுத்தார்.

கணவர் யோபேல் விக்டர்

இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீஸார் ஜோஸ்பின்மேரியின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஜோஸ்பின்மேரி உடல் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வு செய்யப்பட்டது. இதில் ஜோஸ்பின்மேரி கொலை செய்யப்பட்டு இறந்துள்ளதாக அறிக்கை வந்தது. இதையடுத்து ஜோஸ்பின் மேரி வீட்டில், வீட்டு வேலைப்பார்த்து வந்த மனோஜிப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கிய டென்சி (34)என்ற பெண்ணிடம் போலீஸார் விசாரித்தனர். இதில் நகைக்காக ஜோஸ்பின் மேரி கொலை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தோம், ``ஆரோக்கிய டென்சி சுமார் 5 மாதங்களாக ஜோஸ்பின்மேரி வீட்டில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று ஜோஸ்பின்மேரிக்கு கழுத்து வலி ஏற்பட்டுள்ளது. அப்போது ஆரோக்கிய டென்சியிடம் கழுத்து பகுதியை அமுக்க சொல்லியிருக்கிறார். இதனை பயன்படுத்தி கொண்ட அவர் ஜோஸ்பின்மேரி கழுத்தில் இருந்த ஐந்து பவுன் தங்க செயினை கழற்றியிருக்கிறார்.

Also Read: நாங்குநேரி: மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்; நகைக்காக மருமகனே கொலை செய்த கொடூரம்!

ஏன் செயினை கழட்டுறனு கேட்டு ஜோஸ்பின் மேரி சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து கழுத்தை நெரித்து, வாயில் துணியினை வைத்து திணித்து கொலை செய்ததுடன் கழுத்தில் இருந்த செயின், வளையல்,ஏ.டி.எம் கார்டு ஆகியவற்றை எடுத்து கொண்டதுடன் ஜோஸ்பின் மேரி செல்போனை சுவிட்ச் ஆப் செய்து தண்ணீர் டேங்கில் போட்டு விட்டு தன் கணவரை வர வைத்து அவருடன் டூவீலரில் தப்பி சென்று விட்டார்.

இதுல என்ன வேடிக்கைன்னா யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க ஜோஸ்பின்மேரி உடலைப் பார்த்து ஆரோக்கிய டென்சி கதறி அழுது நடித்துள்ளார். தனக்கு கடன் இருப்பதாகவும் அதற்காக செயினை எடுக்கும் போது கொலை செய்து விட்டதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆரோக்கிய டென்சி மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் யோபேல் விக்டர் என்கிற யோகேஷ் ஆகிய இருவரையும் கைது செய்துல் சிறையில் அடைத்துள்ளதாக தெரிவித்தனர்.



source https://www.vikatan.com/news/crime/women-killed-lady-for-gold-caught-by-police-tanjore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக