Ad

வியாழன், 24 டிசம்பர், 2020

`பா.ஜ.க-வில் இணைந்தது ஏன்?’ - மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அருணாச்சலம்! #NowAtVikatan

பா.ஜ.க-வில் இணைந்த மநீம பொதுச் செயலாளர்!

தமிழகத்தில் தேர்தல் காலம் நெருங்கி வருவதை பல்வேறு கட்சி தாவல் நடவடிக்கைகள் நமக்கு காட்டிக்கொடுக்கிறது. மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்க அடித்தளமிட்ட நாள் முதல் கமல்ஹாசன் அருகில் இருந்தவர் அருணாச்சலம், கட்சி தொடங்கிய பின்னர், மக்கள் நீதி மய்யத்தின் நிறுவன பொதுச்செயலாளராக செயலாற்றி வந்தார். இந்நிலையில் இன்று அவர் பா.ஜ.க-வில் இணைந்தார். சென்னை பா.ஜ.க அலுவலகமான கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அருணாச்சலம்,``தொலைநோக்கு பார்வையுடன் மத்திய பா.ஜ.க அரசு வேளாண் சட்டங்களை வகுத்துள்ளது. மக்கள் நீதி மய்யம் புதிய வேளாண் சட்டங்களை ஏற்காததால், அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்தேன்” என்றார்.



source https://www.vikatan.com/news/general-news/25-12-2020-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக