Ad

புதன், 19 ஆகஸ்ட், 2020

திருச்சி: `பாதை அமைப்பதில் தகராறு; கொல்லப்பட்ட தந்தை, மகன்!’ - அதிர்ச்சி சம்பவம்

இடத்தகராறில் தந்தை, மகனை வெட்டி படுகொலை செய்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் கூட இடத் தகராறில் ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் நடுரோட்டில் ஓட ஓட வெட்டி கொலை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சம்பவம் அடங்குவதற்கு மீண்டும் மற்றொரு சம்பவம் அரங்கேறியிருப்பது திருச்சி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

ரோக்கு ராஜ்

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் நடு இருங்களுரைச் சேர்ந்த அந்தோனிராஜ் மகன்கள் ஆரோக்கியசாமி, ரோக்குராஜ். இருவரும் விவசாயிகள். இவர்களுக்கு இருங்களூர் நடுகரை ஆற்றோர பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் சில பகுதிகளைப் பிடித்து விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பாதை தொடர்பாக ஏற்பட்ட தகராரில் அண்ணன் ஆரோக்கியசாமியைத் தம்பி ரோக்குராஜ் வெட்டி படுகொலை செய்தார்.

இந்த கொலை வழக்கின் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ரோக்குராஜ் சிறைக்குத் தண்டனை முடிவுற்றதால் கொஞ்சம் நாட்களுக்கு முன்பு தான் வெளியே வந்துள்ளார். ரோக்கு ராஜுக்கு ஜான்டேவிட் என்ற மகன் ஆட்டோ டிரைவராக உள்ளார். அதேபோல ஆரோக்கியசாமிக்கு ஜேசுராஜ் (55) என்ற மகன் இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இந்நிலையில் விவசாய நிலங்களுக்கு வண்டி செல்வதற்காகப் பாதை அமைப்பது தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

ரோக்கு ராஜ் மகன் ஜான்டேவிட் மகன் வெட்டி கொலை

ஜேசுராஜ் பாதை விடாததால் ரோக்குராஜ் பாதையை முள் வெட்டி அடைத்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் ஜேசுராஜூம், இவரது மகன் பிரின்ஸ்ம் சேர்ந்து ரோக்குராஜ் மற்றும் இவரது மகன் ஜான்டேவிட் இருவரையும் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இந்த மோதலில் உயிரிழந்தவர்கள் அரிவாளால் வெட்டியதில் ஜேசுராஜ் இவரது மகன் பிரான்ஸிஸ் ஆகியோர் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவலறிந்த சமயபுரம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்தவர்களின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காகத் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

விசாரணையில் போலீஸார்

கடந்த ஜூலை மாதம் திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே பாளைய நல்லூர் பகுதியைச்சேர்ந்த புகழேந்தி இடத்தகராறு காரணமாக அவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் இரவு நேரத்தில் ஓடஒட விரட்டி வெட்டி படுகொலை செய்தார்கள். அந்த சம்பம் அடங்குவதற்கு மீண்டும் ஒரு படுகொலை நடந்திருப்பதால் திருச்சி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.



source https://www.vikatan.com/news/crime/trichy-father-son-killed-on-land-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக