Ad

சனி, 2 ஜனவரி, 2021

`கோவிஷீல்டு, கோவாக்ஸின் தடுப்பூசிகளுக்கு அனுமதி!' - இந்திய தலைமை மருந்து கட்டுப்பாடு அமைப்பு #NowAtVikatan

கோவிஷீல்டு, கோவாக்ஸின் தடுப்பூசிகளுக்கு அனுமதி!

இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வழங்கப்பட்டுவிட்டபோதிலும், கொரோனா பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. அதே நேரத்தில், கொரோனா தடுப்பு மருந்து தொடர்பான ஆராய்ச்சிகளும் நடைபெற்றுவந்தன.

கோவிட்-19 தடுப்பூசி

இந்தநிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய தலைமை மருந்து கட்டுப்பாடு அமைப்பு ஜெனரல், ``சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் ஆகியவற்றின் தடுப்பூசிகளுக்கு அவசரகாலச் சூழ்நிலையில் அனுமதி வழங்கப்படுகின்றன. பல்வேறுகட்ட சோதனைகளுக்குப் பிறகு கோவாக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார். இந்த இரண்டு மருந்துகளையும் 2 முதல் 8 டிகிரி செல்ஷியஸில் பராமரிக்கலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/news/03-01-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக