Ad

திங்கள், 21 டிசம்பர், 2020

காலங்கள் மாறினாலும் சித்தார்த் மட்டும் மாறவில்லை... இனி என்ன செய்வாள் அபி? #VallamaiTharayo

குழந்தைகளுடன் அபியின் ஆபிஸுக்கு வருகிறான் சித்தார்த். பென்னியையும் லோகேஷையும் அறிமுகம் செய்கிறாள் அபி. அப்போது கெளதம் அபியை அழைக்க, `சித்தார்த் என்ன சொல்லப் போகிறானோ’ என்று பதறுகிறாள். அவன் போனில் பேசிக்கொண்டே சென்றதால் தப்பித்துவிட்டாள் என்பதில் நமக்கும் நிம்மதி!

Vallamai Tharayo

துர்காவின் கணவர் வீட்டைக் காலி செய்கிறார். அபியிடம் வருத்தப்பட்டு பேசுகிறார். “துர்காதான் எனக்குத் தைரியம் கொடுத்தவர். என்னை எனக்கே உணர வைத்தவர். ஆனா, அவரே இப்படிப் பண்ணினது எனக்கு அதிர்ச்சியா இருக்கு” என்று அபி வருத்தப்படும்போது, சித்தார்த் வருகிறான்.

“சார், மனைவியின் அருமை இருக்கும்போது தெரியறது இல்ல. போன பிறகுதான் தெரியுது. இவங்களை நல்லா பார்த்துக்கோங்க” என்று சொல்லிவிட்டுக் கிளம்புகிறார் துர்காவின் கணவர்.

நிகழ்காலத்தில் அபியின் க்வாரன்டீன் பீரியட் முடிகிறது. தங்குவதற்கு இடம் கேட்டு, லோகேஷ் ஆபிஸுக்கு போன் செய்கிறாள். அவன் அங்கு இல்லை என்கிறார்கள். பிறகு காயத்ரியின் நம்பர் வாங்கி, தொடர்புகொள்கிறாள். அவள் தன்னுடைய காலி ஃபிளாட்டில் தங்கும்படிச் சொல்கிறாள்.

Vallamai Tharayo

அபி வெளியே கிளம்பும்போது சித்தார்த் வருகிறான். அதிர்ச்சியடைகிறாள். “க்வாரன்டீன் முடிஞ்சிருச்சுல. வா, வீட்டுக்குப் போகலாம்” என்று கூப்பிடுகிறான் சித்தார்த்.

`வர முடியாது’ என்கிறாள் அபி. “உன் அம்மா, அப்பா இருக்கிற வீட்டுக்கும் வரலைன்னா என்ன பண்ணப் போறே? நான் கொஞ்சம் இறங்கிவந்தால் ஆட்டிடியூட் காட்டறீயா?” என்று வழக்கமான சித்தார்த்தாகவே கத்துகிறான்.

“என்னைப் பார்த்துக்க எனக்குத் தெரியும். இதுக்குப் பேர் கன்சிடரேஷன் இல்ல, கால்குலேஷன்” என்று சொல்லிவிட்டு, எரிச்சலுடன் கிளம்புகிறாள் அபி.

அவளையே பார்த்துக்கொண்டு நிற்கிறான் சித்தார்த்.

இனி?

இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!

- எஸ்.சங்கீதா



source https://cinema.vikatan.com/web-series/vallamai-tharayo-digital-daily-series-review-for-episode-41

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக