தோனியின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும்!
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற மகேந்திரசிங் தோனியின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியிருக்கிறார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இன்ஸ்டாகிராம் மூலம் அறிவிப்பை வெளியிட்ட தோனி, ``எல்லோருடைய அன்புக்கும் நன்றி. 7.29 மணி முதல் நான் ஓய்வுபெற்றதாகக் கருதிக் கொள்ளுங்கள்’’ என்று அறிவித்திருந்தார். தோனி ஓய்வுபெற்றது குறித்து கிரிக்கெட், சினிமா உலகம் தொடங்கி அரசியல் பிரபலங்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,``இந்திய அணியை 331 சர்வதேச போட்டிகளில் வழிநடத்தி, 3 சாம்பியன்ஷிப்களை இந்தியாவுக்காக வென்றுகொடுத்த ஒரே கேப்டன் கூல், தோனியின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும். தோனியின் புகழ் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்ப்பதாகும்’’ என்று பதிவிட்டிருக்கிறார்.சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற மகேந்திரசிங் தோனியின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியிருக்கிறார்.
source https://www.vikatan.com/news/general-news/16-08-2020-just-in-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக