புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் உள்ளார். சிறுமியின் உறவுக்கார இளைஞர் முருகன். உறவுக்கார இளைஞர் என்பதால், முருகனுக்குச் சிறுமியுடன் அடிக்கடி தனியாக இருக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. இந்த சூழலைப் பயன்படுத்திய முருகன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
![](https://images.assettype.com/vikatan/2020-08/3ce314cc-8b34-4af2-96b4-64d3a119cc99/vikatan_2019_07_b117f7f4_1671_4f8a_8c46_3ab607bf2005_3456385187_11553_12249.jpg)
சிறுமியுடன் தனியாக இருக்கும்போது செல்போனில் படங்களை எடுத்து வைத்திருந்த முருகன், அந்த படங்களைச் சிறுமியின் தாயாரிடம் காண்பித்து சிறுமியைத் தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. சிறுமியின் தாய் கீரனூர் மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து முருகனைக் கைது செய்த போலீஸார், சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் ஏதும் பதிவேற்றம் செய்தாரா என்பது குறித்தும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஏம்பலில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டார்.
![](https://images.assettype.com/vikatan/2020-08/b7279dcb-e9eb-48c3-beab-5af60c891a2c/IMG_20200803_WA0204.jpg)
கடந்த வாரம் 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த நிலையில்தான், தற்போது 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுமிகளின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
source https://www.vikatan.com/news/crime/pudukottai-police-arrests-youth-over-sexual-harassment-complaint
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக