Ad

சனி, 5 ஜூன், 2021

“ லாக்டௌன் பிரச்னையால் விரத நாள்களில்கூட ஆலயம் செல்ல முடியவில்லை...” பக்தரின் வருத்தமும் பதிலும்!

இன்றைய பஞ்சாங்கம்

6. 6. 21 வைகாசி 23 ஞாயிற்றுக்கிழமை

திதி: ஏகாதசி காலை 9.20 வரை பிறகு துவாதசி

நட்சத்திரம்: அசுவினி

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: மாலை 4.30 முதல் 6 வரை

எமகண்டம்: பகல் 12.00 முதல் 1.30 வரை

நல்லநேரம்: காலை 7.30 முதல் 8.30 வரை/ பகல் 3.30 முதல் 4.30 வரை

வண்டியூர் வீரராகவப் பெருமாள்

சந்திராஷ்டமம்: உத்திரம்

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

வழிபடவேண்டிய தெய்வம்: மகாவிஷ்ணு

இன்று: சர்வ ஏகாதசி

“விரத நாள்களில்கூட ஆலயம் செல்ல முடியவில்லை”

'ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்பது ஔவையின் வாக்கு. தினமும் ஆலயம் சென்று வழிபாடு செய்வது நம் மரபோடு ஒன்றியிருக்கும் விஷயம். குறிப்பாக விரத நாள்களில் ஆலயம் சென்று தங்கியிருந்து மனம் ஒன்றி வழிபாடு செய்வது வழக்கம். அப்படிப்பட்ட வழக்கம் உள்ள ஒரு வாசகர் ஒவ்வொரு மாதமும் வரும் இரண்டு சஷ்டி திதிகளுக்கும் திருத்தணி சென்று விரதம் மேற்கொள்ளும் வழக்கம் கொண்டவர். சமீப காலமாக நிகழும் லாக்டௌன் பிரச்னையால் அவரால் திருத்தணி சென்று வழிபட முடியவில்லை. இதனால் மனம் வருந்திய வாசகர் விரதம் மேற்கொள்வதிலும் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார். இந்தப் பிரச்னையை எதிர்கொள்வது எப்படி என்று கேள்வியெழுப்பியிருந்தார். அவரின் கேள்விக்கான பதிலை அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

இன்றைய ராசிபலன்

விரிவான இன்றைய பலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மேஷம்

நம்பிக்கை : மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். புதிய செயல்கள் சாதகமாக முடியும். செலவுகள் அதிகரித்தாலும் சமாளிக்கும் அளவுக்குப் பணவரவும் இருக்கும். - நம்பிக்கையே வாழ்க்கை!

ரிஷபம்

மேன்மை : இன்று அனைத்து செயல்களும் நன்மையாகவே முடியும். உடல் ஆரோக்கியத்திலிருந்த சிறுசிறு குறைபாடுகள் நீங்கி உடல்நலம் மேன்மையுறும். - ஆல் இஸ் வெல்!

மிதுனம்

உற்சாகம் : காலைமுதலே உற்சாகம் அதிகரிக்கும். உறவினர்கள் தேடிவந்து உதவுவார்கள். குடும்பத்தின் அன்பும் பாசமும் நிறைந்திருக்கும் நாள். - என்ஜாய் தி டே!

கடகம்

கவனம் : சுறுசுறுப்பாக இருப்பீர்கள். நன்மைகள் அதிக அளவில் நடைபெற்றாலும் வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. - ஸ்லோ அண்ட் ஸ்டெடி வின்ஸ் தி ரேஸ்!

சிம்மம்

பொறுமை : சொல்லிலும் செயலிலும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் தேவை. பேச்சிலும் நிதானம் தேவை. - டேக் கேர் ப்ளீஸ்!

கன்னி -

நிதானம் : சாதகமான நாள் என்றபோதும் பேச்சில் நிதானம் தேவை. மற்றபடி புதிய முயற்சிகளில் கவனம் தேவை. இறைவழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டிய நாள் . - கேர் ஃபுல் ப்ளீஸ்!

துலாம்

பணவரவு : எதிர்பாராத பணவரவு ஏற்படும். தந்தைவழி உறவினர்களால் செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் செய்வீர்கள். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். - இறைவன் இருக்க பயம் ஏன்?

விருச்சிகம்

செலவு : வரவைவிடச் செலவுகள் அதிகமாக இருக்கும் நாள். விவாதம் செய்வதைத் தவிருங்கள். தேவையற்ற சிந்தனைகளை விட்டுவிடுங்கள். - வரவு எட்டணா செலவு பத்தணா!

தனுசு:

மகிழ்ச்சி : காலை முதலே சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் காணப்படுவீர்கள். குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். நன்மைகள் நடைபெறும் நாள். - ஜாலி டே!

மகரம்

சாதகம் : ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சிகளைத் திட்டமிடலாம். காரிய அனுகூலம் ஏற்படும். குடும்பத்தினரின் அன்பு மழை பொழிவார்கள். - சாதகமான ஜாதகம் இன்று!

கும்பம்

பக்தி : இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். குல தெய்வ வழிபாட்டை வீட்டில் மேற்கொள்வீர்கள். மன உறுதி அதிகரிக்கும். உற்சாகமாகச் செயல்படுவீர்கள். - எல்லாம் அவன் செயல்!

மீனம்

துணிவு : புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். மனதில் தைரியமும் நம்பிக்கையும் அதிகரிக்கும். குழப்பங்கள் மறையும். முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். - துணிவே துணை!



source https://www.vikatan.com/spiritual/temples/unable-to-go-to-temple-on-lock-down-days-ways-to-overcome-this-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக