Ad

வெள்ளி, 13 நவம்பர், 2020

அனு வருகிறாள்... அபி ஆர்வமாகிறாள்... வீட்டில் பூகம்பம் வெடிக்குமா? #VallamaiTharayo

``அவங்க இவங்கன்னு இங்கே எந்தத் தொந்தரவும் இல்ல. சந்தோஷமா மகாராணி மாதிரி இருக்கே இல்ல” என்று சித்தார்த் கேட்கும்போது, புன்னகையுடன் தலையாட்டுகிறாள் அபி. அந்த மகிழ்ச்சியை அதற்கு மேல் நீடிக்கவிட்டால், அவன் சித்தார்த்தாக இருக்க முடியாது இல்லையா?

Vallamai Tharayo

``உனக்கென்ன... பெரிய வீடு. தொந்தரவுக்கு யாரும் இல்லை. ஒரு மணி நேரத்துல சமையல்ங்கிற பேர்ல ஏதோ செஞ்சு கொடுத்துடுறே. குழந்தைகளோட விளையாடுறே. அப்புறம் நாள் முழுக்க ரெஸ்ட்தான். ஆனா, நான் காலையில் போனா நைட் 10 மணிக்குதான் வீடு திரும்பறேன். நீ ரொம்ப லக்கி. இந்த மாதிரி வாழ்க்கைக்குக் கொடுத்து வச்சிருக்கணும்” என்று சித்தார்த் சொல்லும்போது அபிக்கு மட்டுமல்ல; நமக்கும் சங்கடமாக இருக்கிறது.

வசதிக்கும் மகிழ்ச்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. வசதியே இல்லாவிட்டாலும் நல்ல கணவன் அமைந்தால், அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். அதுவே எல்லா வசதிகளும் இருந்து, சித்தார்த்போல ஒரு கணவன் இருந்தால் அங்கே மகிழ்ச்சிக்கு இடம் இருக்குமா, என்ன?

Vallamai Tharayo

பக்கத்து வீட்டில் ஜோடியாகக் குடிப்பதைப் பார்த்த அபிக்கு அவர்கள் மீது நல்ல அபிப்ராயம் இல்லை. நேரில் ஒரு முறை சந்தித்தபோதுகூட அவள் பேசவில்லை. குடி - அதுவும் பெண் குடிப்பதை வைத்து, அவர்களைப் பற்றிய மோசமான அபிப்ராயத்துக்கு வந்துவிட முடியுமா? `அந்தப் பெண்ணைப் பார்த்தால் தப்பானவளாகத் தோன்றுகிறது' என்று சித்தார்த்திடம் சொல்கிறாள் அபி. குடித்த ஆணை அவள் தவறாக நினைக்கவில்லை. குடித்த பெண்ணைத்தான் தவறாக நினைக்கிறாள். என்ன நியாயமோ?

`நான் எதைச் செய்தாலும் சிறப்பாகச் செய்வேன். விசாரித்துதான் இங்கே குடி வந்திருக்கிறேன்' என்கிற சித்தார்த், `அவர்கள் வாழ்க்கையில் நாம் மூக்கை நுழைக்கக் கூடாது' என்கிறான். பக்கத்து வீடு பற்றிய அபிப்ராயத்தில் சித்தார்த் சொல்வது சரிதான். அபிக்கு என்ன பிரச்னையோ?

க்வாரன்டீனில் இருக்கும் அபியை அழைக்கிறாள் அனு. சென்னைக்கு வந்து பார்ப்பதாகச் சொல்கிறாள். சென்ற முறை வந்தபோது நடந்த விஷயங்களை மறக்க முடியவில்லை என்கிறாள்.

Vallamai Tharayo

ஃப்ளாஷ்பேக்... வேலை விஷயமாகச் சென்னை வந்த அனு, ஹோட்டலுக்கு அவளை வரச் சொல்கிறாள். சித்தார்த் சிங்கப்பூர் சென்றுள்ளதால் வீட்டுக்கு வந்து தங்கச் சொல்கிறாள் அபி. இருவரும் பழைய கதைகளைப் பேசி மகிழ ஆர்வமாக இருக்கிறார்கள். அனுவின் வருகை அபியின் வீட்டில் பூகம்பத்தைக் கொண்டு வந்துவிடும் என்று யூகிக்க முடிகிறது.

என்ன நடக்கப்போகிறது?

இன்று இரவு 7 மணிக்குப் பார்ப்போம்!

- எஸ்.சங்கீதா


source https://cinema.vikatan.com/web-series/vallamai-tharayo-digital-daily-series-readers-review-for-episode-13

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக