Ad

புதன், 18 நவம்பர், 2020

மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று! - சுகாதாரத்துறை #NowAtVikatan

4 மாணவர்களுக்கு கொரோனா!

மாணவர்களுக்கு பரிசோதனை

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக கலந்தாய்வில் கலந்து கொள்ள வந்த மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று கலந்தாய்வில் பங்கேற்ற 262 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டத்தில் 4 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.



source https://www.vikatan.com/news/general-news/19-11-2020-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக